முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூர்யாவின் சூரரைப் போற்று அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்பு

நடிப்பின் அரக்கன்  சூர்யா தயாரித்து நடித்த  திரைப்படமான ”சூரரைப் போற்று” இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சுதா கொங்கராவின் முந்தைய திரைப்படமான இறுதிச் சுற்று மெகாஹிட் ஆனதால் சூரரைப் போற்று மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் திரைப்படத்தின் டீசரும் பட்டித் தொட்டி எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்வாறான சூழலில் செக் வைத்தது கொரோனா. படத்தை எடுத்து முடித்து விட்டு வெளியிடமுடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை அதோகதியாக உள்ளது. காரணம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படுவது தள்ளிப்போய் வருகிறது. இதனால் திரையரங்கம் சார்ந்த ஏராளமான ஊழியர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

இன்னல்மிக்க சூழலில் விநாயகர் சதூர்த்தியான இன்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படம் அமேசானில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் என்ற முறையில் வேறு வழியின்றி பலரையும் மனதில் வைத்து மனசாட்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

இயக்குனரின் பல ஆண்டு கால உழைப்பு, கலைஞர்களின் கற்பனைத்திறன் போன்றவற்றை சரியான நேரத்தில் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தம் நோக்கம் எனவும் சூரியா கூறியுள்ளார். மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையில் 5 கோடி ரூபாயை கொரோனா காலத்தில் முன்நின்று சேவையாற்றுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சூர்யாவின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரிய ஹீரோக்களின் படத்தை வைத்தே மக்களை தியேட்டருக்கு வரவைக்க திட்டமிட்ட நிலையில் சூர்யாவின் இந்த முடிவு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் மனைவில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை ஓடிடி யில் வெளியிட்டதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதோ சூர்யா வெளியிட்ட டிவிட்டர் அறிக்கை.!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் லிங்க் இதோ உங்களுக்காக !

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற படங்கள் நிறைய உள்ளது. மலையாள மொழியில் இது போன்ற படங்களை பொழுதுபோக்கிற்காக தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கின்றனர் . ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். அய்யபனும் கோஷியும்:  எக்ஸ் மிலிட்டரி ஆபீஸராக கௌசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரித்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் நாயராக பிஜுமேனன் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கும். மலையாள மக்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிக அளவில் பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது. முழு படம் பார்க்க:  Prime Video அஞ்சாம் பத்திரா:  மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம்தான் அஞ்சாம் பத்திர...

For Regular Updates Follow